சட்டமென்பது, வணக்கவழிபாடுகள், அன்றாட நடைமுறைகள், கொள்கைக் கோட்பாடுகள், வாழ்க்கை நெறிகள், அரசியல் போன்றவற்றையும், மனிதனுடைய வாழ்க்கையில் அமைகின்ற இவையல்லாத ஏனையவற்றையும் உள்ளடக்குகின்றதாகவே இருக்கின்றது.
"சிறைக் கூடத்திலிருக்கும் என்னிரு தோழர்களே! (யாதொரு சக்தியுமற்ற) வெவ்வேறு தெய்வங்கள் மேலா? அல்லது (யாவரையும்) அடக்கி ஆளுகின்ற (ஒரே நாயனாகிய) அல்லாஹ் ஒருவனே மேலா? அவனையன்றி நீங்கள் வணங்குபவை யாவும், நீங்களும் உங்கள் மூதாதையர்களும் வைத்துக் கொண்ட வெறும் (கற்பனைப்) பெயர்களைத் தவிர (உண்மையில் அவை எதுவுமே) இல்லை. அல்லாஹ் இதற்கு யாதோர் ஆதாரத்தையும் இறக்கி வைக்கவுமில்லை. சகல அதிகாரங்களும், அல்லாஹ் ஒருவனுக்கேயன்றி (வேறெவருக்கும்) இல்லை. அவனைத்தவிர, (மற்றெவரையும்) நீங்கள் வணங்கக் கூடாதென்று அவனே கட்டளை இட்டிருக்கின்றான். இதுதான் நேரான மார்க்கம். எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் (இதனை) அறிந்து கொள்வதில்லை. (என்று யூஸுப் (அலை) அவ்விருவருக்கும் நல்லுபதேசம் செய்துவிட்டு, அவர்களின் கனவுகளுக்கு விளக்கம் அளித்தார்கள்" (12:39,40)
இமாம்கள், ஏதாவதொரு விஷயத்தில் கருத்து வேறுபட்டால், அவர்களில் ஒருவருடைய சொல்லில் மட்டுமே நாங்கள் பிடிவாதமாக இருக்கக் கூடாது. சரியான ஆதாரம் எவரிடம் உண்டோ அதனையே எடுத்துக் கொள்ள வேண்டும். இதுவே குர்ஆன் ஸுன்னாவைக் கொண்டுள்ள அடிப்படைச் சட்டமாகும்.
இவ்வசனம் அருளப்பட்ட காரணத்தை முபஸ்ஸிரீன்கள் (விரிவுரையாளர்கள்) பின்வருமாறு கூறுகின்றார்கள்.
இரண்டு நபித்தோழர்கள் (அருகருகே உள்ள தத்தமது தோட்டங்களுக்கு) நீர் பாய்ச்சுவதில் கருத்து வேறுபட்டுக் கொண்டனர். அப்பொழுது நபி (ஸல்) அவர்கள் (அவர்கள் இருவருக்கும் மத்தியில் நீதியாக) ஸுபைர் (ரலி) அவர்களுக்கு நீர் பாய்ச்சுமாறு தீர்ப்பளித்தார்கள். இதில் சம்பந்தபட்ட அடுத்தவர் 'நபியே! உங்களது சாச்சாவின் மகனுக்காக நீங்கள் இவ்வாறு தீர்ப்பளித்து விட்டீர்கள்' என்று சொல்லி விட்டார். அப்பொழுது தான் இவ்வசனம் அருளப்பட்டது. ஆதாரம்: புகாரி
ஷரீஅத் சட்டம் பற்றி பின்வரும் அல்குர்ஆன் வசனம் தெளிவு படுத்துகின்றது.
"(மூமின்களே!) நூஹுவுக்கு அவன் (அல்லாஹ்) எதனை உபதேசித்தானோ, அதனையே உங்களுக்கும் மார்க்கமாக்கி இருக்கிறான். ஆகவே (நபியே!) நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிப்பதும், இப்றாஹீம், மூஸா, ஈஸா ஆகியோருக்கு நாம் உபதேசித்ததும் என்னவென்றால், (நீங்கள் ஒருமித்து ஏகதெய்வக் கொள்கையுடைய உண்மையான) மார்க்கத்தை நிலையாக கைக்கொள்ளுங்கள். அதில் (பல பிரிவுகளாகப்) பிரிந்து விடாதீர்கள் என்றுதான்" (42:13)
மார்க்க விதிகளை ஏற்படுத்தும் உரிமையை அல்லாஹ் அல்லாதவர்களுக்குக் கொடுக்கும் இணைவைப்போரை அல்லாஹ் மறுத்துரைத்துப் பின்வருமாறு கூறுகின்றான்.
"அல்லாஹ் அனுமதிக்காத எதனையும் அவர்களுக்கு மார்க்கமாக்கி வைக்கக்கூடிய இணை (தெய்வங்)களும் அவர்களுக்கு இருக்கின்றனவா?" (42:21)